அன்பு உறவினர்களே!
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் விஸ்வகர்மா இணையதளம், ஏற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ் விஸ்வகர்மா அன்பர்களுக்கு இது ஒரு பயனுள்ள தளமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். கீழ்க்காணும் சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் நமது தமிழ் விஸ்வகர்மா இணையதளத்தை அடையலாம். எங்களுடன் இணைந்து, தாங்களும் பயன் பெற்று, மற்றவர்களுக்கும் பயன் தரும் வகையில் சமூகப் பணியாற்றுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுகொள்கிறோம். பதிவு செய்யப்படும் விவரங்கள் தங்களின் அனுமதியின்றி வேறு யாருக்கும் தரமாட்டோம் என்று உளமார உறுதி கூறுகிறோம்.
தமிழ் விஸ்வகர்மா கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கல்யாண மாலை நிகழ்ச்சியினை சித்திரை மாதத்தில் சென்னை அல்லது மதுரையில் நடத்த உள்ளோம். தங்களின் விருப்பத்திற்கிணங்க இடத்தை தேர்வு செய்யவும். பெரும்பாண்மையை வைத்து இடத்தை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் பின் வரும் மிக முக்கியத் தீர்மானங்களை எடுக்கவிருக்கிறோம்:
(1) பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தல்
(2) வேலை வாய்ப்பு (தகவல் மற்றும் ஏற்பாடு செய்தல்)
(3) கல்வி - பரிசுகள் தந்து ஊக்குவித்தல்
(4) சுயம்வரம் (மணமகள்-மணமகன் விவரங்களை சேகரித்து உதவுதல்)
மேலும் தாங்கள் அறிவுறுத்தும் தீர்மானங்களையும், யோசனைகளையும், நிறைவேற்றி, செயல்படுத்த ஒன்று கூடுவோமாக !
இடம், தேதி போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பதிவிடவும்.
கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நமது இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.
வாழ்க வளமுடன் !
அன்பன்
விஸ்வகரன்
No comments:
Post a Comment