Monday, October 31, 2011

நமது குலத்தவரின், குலத்தொழில்களின் நசிவு

உலகுக்கு கலையை அறிமுகம் செய்த உத்தம கலைஞர்கள் நம் விஸ்வகுலத்தினர். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நம் குலத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம். நம் குலத்தவர் அறிந்து பாடவேண்டிய கீழ்க்காணும் குலக்கீர்த்தியை நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர்.?

"பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்.
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு, மயா, த்வஸ்ட்டா, சிற்பி, விஸ்வஞ்ஞா என்னும்
விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து
விஸ்வகர்மாவென்னும் நாமம் பெற்று
தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும்
சகலகலை குருவென்று சாற்றினார் காண்"

உலகின் கலைகளனைத்துக்கும் குருவாக விஸ்வகர்மாவை அமைத்து, நம் மக்களை உலகின் முன்னோடியாக படைத்தான் இறைவன். ஆனால் தன்னிலை அறியாது இன்றைக்குக் கீழ்நோக்கிப் போய்விட்ட நம்மவர்களின் நிலைக்குக் காரணம் யார்? சத்தியமாக நாமேதான். நம்மிடையே அற்றுப்போன ஒற்றுமை, தனிமனித ஒழுக்க நிலை போன்றவைதான் முதன்மையான காரணம்.

முக்காலத்தில் தமிழகத்துக் கம்மாளர்கள் கலைகளின் முன்னோடியாக விளங்கினார்கள். மிகச்சிறந்த கலைநுட்பமும், பேராற்றலும் படைத்து, கட்டிடக்கலையில் மிகச்சிறந்து விளங்கினார்கள். இவர்களுக்கு போர்ப்பயிற்சி இல்லை.  ஆனாலும் தம் சமுதாயத்தவரின் பாதுகாப்பிற்காக 
சிறந்த அரண்களை அமைத்துத் தம்மைக் காத்துக் கொண்டிருந்தனர்.  இச்சமயத்தில்தான் முஸ்லீம்களின் படையெடுப்பு நடந்தது. என்ன முயற்சி செய்தும் முஸ்லீம்களால் நம்மவர்களை நெருங்க இயலவில்லை. இவர்களின் கலைத்திறனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. அச்சமயத்தில் அவர்கள் தொடுத்த சில பாணங்களால், நம்மவர்களில் சிலர் கோடாரிக்காம்பாகிப் போனார்கள். ஆனால் அதற்கு முன்னரே மிகச்சிறந்த கட்டடங்களை, அறிவுநுட்பத்துடன் படைத்து உலகுக்களித்த முன்னோடிகள் நம் கம்மாளர்கள். இது போன்ற சேர்க்கைகளால்தான் இன்றைக்கும் தமிழகத்துக் கம்மாளர்கள், முஸ்லீம்களுடனான உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கும், நமக்குமான உறவுமுறை நாம் அறிந்ததே...

நம்மவர்களை சீர்ப்படுத்தி சுய ஒழுக்கத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது படித்த நம் அனைவரின் தலையாய கடமை.  அமாவாசை நாளில் நம்மவர்கள் ஐந்தொழில்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது விதி.  மீறி செய்ய வேண்டுமென்றால் கத்தரிக்காயை உண்டு பின்னர் செய்ய வேண்டும். ஆனால் நாம் இதைக் கடைபிடிப்பதில்லை.
 முன்னோர்கள் வகுத்த விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது நமது கடமை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மீனவர்களுக்கு பணியில்லாத நாட்களில் வருமானம் இவை போன்று பிற சமுதாயத்தவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் நம்மவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைப்பதில்லை.. தேர்தல் நேரங்களில் நம்மை நெருங்கிவரும் அரசியல்வாதிகள், பிற நேரங்களில் காணாமல் போவது வாடிக்கையாகி விட்ட சூழ்நிலையில், நாம் நமக்கென்று சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அரசியலிலும் அங்கம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.  இதற்கு நம்மவர்களை நாம்தான் தயார் செய்தாக வேண்டும்.

எங்கு நோக்கினும் வியாபார சிந்தனை கொண்டோர்கள் நம்மவர்களை நசித்துக் கொண்டிருப்பதைத்தான் நாம் காண்கின்றோம். தங்க நகைகளை மிகச்சிறந்த நுட்பத்துடன் செய்து தரும் தட்டானை விட, அதை வியாபாரம் செய்யும் வியாபாரிக்குக் கிடைக்கும் வருமானம் அதிகம். 
ஆகவே நாம் முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். 
இனிமேல் நமக்குத் தேவையான நகைகளை, நம்மவர்களிடம்
மட்டுமே செய்து தரச்சொல்லி வாங்கி அவர்களுக்கேற்ற வருமான வாய்ப்பைத் தர
வேண்டும்.

நம்மவர்களும், செய்யும் தொழிலை தெய்வமெனக் கொண்டு செய்து பழக வேண்டும். நமது தொழில் மூலம் பிறரை ஏமாற்றி வஞ்சிப்பது போன்ற காரியங்களை எந்த நிலையிலும் செய்திடக் கூடாது.
மாற்று சமுதாயத்தினரும் நம் தொழிலைக் கற்று நமக்குப் போட்டியாக வந்தது நமக்குப் பெரும் பின்னடைவுதான். ஆயினும், பிறப்பால் கம்மாளனான நம் தொழில் அறிவுக்கு இணையாக அவர்களின் நுட்பம் இருக்காது என்பதே உண்மை. 

நம் சமுதாயம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றதாக மாற வேண்டும். அந்த நிலை வரும்போதுதான் நமது சமுதாயத்தவரின் தொழில் நுட்பத்தோடு, வணிக அறிவும் சேர்ந்து நமது பொருளாதார நிலை உயரும்.
தனது சுயநலனைக் கருதாது, நமது சமுதாயத்தவரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுப்போரை நாம் ஆதரிக்க வேண்டும். "இளவயதில் இவனுக்கெதற்கு வேண்டாத வேலை? இப்படிப்பட்டவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். அப்படிச் செய்தால் இவர்களுக்கு வெளியிடத்திலிருந்து வரும் இன்னல்கள் ஏராளம்." இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட நம்மவர்களை என்னவென்றுரைப்பது??
சென்னையைச் சார்ந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர். ஆயினும் அவரை நம் சமுதாயம் உபயோகப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. நமது சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எடுத்த முயற்சிகள் இன்னும் வெற்றிபெற வில்லை. அப்படி சேர்க்கப்பட்டால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

தியாகராஜபாகவதரின் சிலைகளைத் திறப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட, நம் சமுதாய மக்களின் கல்விக்காக உதவித் தொகைகள் வழங்க நமது சங்கங்கள் முன்வர வேண்டும்.

நமது சமுதாயம் முன்னேற கீழ்க்கண்டவற்றை நாம் நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டும்.

1.  நம் சமுதாய மாணவர்களின் உயர்கல்விக்காக, நம் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியது அவசியம்.

2. நம் குலத்தொழிலை சிரமேற்கொண்டு செய்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் சங்கம் அமைப்பது இன்றியமையானது.

3. வறுமையில் வாடும் நம் குலத்தைச் சார்ந்த மக்கள், மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப் பட வேண்டும்.

4. சுயக் கட்டுப்பாடு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சான்றோனாதல், நம் சமுதாய மக்களுக்கு நாமே உறுதுணையாக இருத்தல் என்பதோடு மட்டுமல்லாது, விஸ்வகர்மாவாக இருப்பதில் பெருமை கொள்ளுதல் வேண்டும்


இந்த கட்டுரையை தொகுத்து அனுப்பிய நம் உறவினர் மு. கந்தசாமி நாகராஜன்,சுப்பிரமணியபுரம் அவர்களுக்கு மிக்க நன்றி.

Thursday, October 13, 2011

மத்திய அரசின் கல்வி உதவி


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவி பெற விரும்புவோரின் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசால் 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட +2 தேர்வில், குறைந்தபட்சம் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ 4 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவிகள் விவரம்:-
(1)    இளநிலை பட்டப்படிப்பு (கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) முதலாமாண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை மாதம் ரூ. 1000   
(2)    முதுநிலை பட்டப்படிப்பு தொடர விரும்பினாலும், அதற்கும் மாதம் ரூ. 2000   
(3)    பொறியியல் படிப்பவருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 அதன் பிறகு மாதம் ரூ2000. மேலும் விவரங்களுக்கு, விண்ணப்ப படிவத்திற்கு இங்கே சொடுக்கவும் http://www.tn.gov.in/dge/

--------------------------------------------------------------------------

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006.

“CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS”
Applications are invited from eligible students for the award of scholarship under the
above scheme. The candidates who have passed and secured a minimum of 80% of marks
and above in the Higher Secondary Examination held in March 2010, conducted by the State
Board of School Examinations, Tamil Nadu and pursuing FIRST YEAR of higher studies in
2010-2011 (not correspondence or distance mode) are eligible to submit application for getting
scholarship announced by the Ministry of Human Resource Development, Department of
Higher Education, Government of India.

From the applications received, the required number of 4883 applications will be
selected based on merit category wise.

The scholarship will be given @ Rs.1000/- per month at Graduation level for first three
years of College and University courses and Rs.2000/- per month at Post graduation level.
Students pursuing professional courses would get Rs.2000/- per month in the 4
th and 5th year.
The scholarship would be paid for 10 months in an academic year.
The award of scholarship shall be subject to the following conditions:
1. The scholarship shall be awarded to the Indian nationals only.

2. The Undergraduate/Post graduate/Professional courses are pursued in a recognized
college/institution in India.

3. The students should belong to non-creamy layer (Parental income not exceeding Rs.4.5
lakhs per annum) as defined by the Department of Personnel and Training in their
Notification No.36012/22/93-Estt. (SCT), dated 08.11.1993 and as modified vide their
OM No.36033/3/2004-Estt. (Res) dated 09.03.2004 and as may be further modified
from time to time and not availing of any other scholarship scheme.

4. The reservation would be applicable in terms of Central Reservation Policy and internal
earmarking.

5. The scholarship will be distributed amongst Pass outs of the Science, Commerce
Humanities and Vocational Streams in the ratio of 3: 2: 0.5: 0.5 with equal number
among boys and girls.

The Blank application forms can be downloaded by the eligible candidates through
http://www.tn.gov.in/dge on or before 12.11.2010.

The filled-in applications (Annexure III to VI the formats of which are available in this
website) should be submitted to the Joint Director (Hr.Sec.), Directorate of Government
Examinations, DPI Campus, College Road, Chennai – 6 on or before 16.11.2010 either by
Registered or Speed Post.
Needless to mention that this is a provisional offer only and final selection will depend upon
the student satisfying the eligibility criteria and number of scholarships ear-marked for this
Board.
Director of Government
Examinations, Chennai – 6.


--------------------------------------------------------------------------

Learn Astrology

Monday, October 10, 2011

வேலை வாய்ப்புகள் - BHEL

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in/bhel/static/etgate2012.pdf என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011.
பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.01.2012.



Sunday, September 11, 2011

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

விஸ்வகர்மா அன்பர்களுக்கு வணக்கம் !

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் பல உள்ளன. குறிப்பாக அபுதாபியில் (யு.ஏ.இ.) உள்ள பணியிடங்களுக்காக தற்பொழுது நேர்காணல் மும்பாயில் நடை பெற்று வருகிறது. 21 செப்டம்பர் 2011 வரை நேர்காணல் நடைபெறும் என்று தெரிய வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மும்பையில் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அம்பே  இண்டர்னேஷனல் என்ற ஏஜெண்ட்டை அணுகவும். இந்த ஏஜெண்ட் எனக்குத் தெரிந்த வரையில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு சிறு பிரச்சினையும் இல்லாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுத்து வருகிறார்கள். சேவை கட்டணமும் குறைவாகவே இருக்கும்.இப்பொழுது இவர்கள் அபுதாபியில் உள்ள CCC (Consolidated Contractors Company – Abu Dhabi) என்ற ஒரு மல்டினேஷனல் கம்பெனிக்கு ஆள் எடுக்கிறார்கள்.

மெக்கானிக்கல் தொடர்பான வேலை விபரம்:

S/NO. JOB TITLE
1 C/H WELDING
2 WELDER - GTAW/SMAW
3 WELDER - GTAW
4 WELDER - SMAW
5 F/M HYDROTESTING
6 F/M PAINTING, BLASTING
7 F/M PIPING
8 F/M RIGGING
9 F/M STEEL STRUCTURAL ERECTION
10 F/M WELDING
11 G/F PIPING
12 G/F WELDING / SUPERVISOR
13 JOB PERFORMER (MECH)
14 STORE KEEPER MECHANICAL
15 SUPERINTENDENT PIPING
16 SUPERVISOR FABRICATION
17 SUPERVISOR PAINTING
18 SUPERVISOR PIPING
19 SUPERVISOR STEEL STRUCTURAL / ERECTION
20 SUPERVISOR WELDING
21 C/H  STRL STEEL ERECTION
22 C/H PIPING
23 C/H STEEL STRUCTURAL
24 GRP LAMINATOR
25 WRAPPER / SHRINK SLEEVES
26 MECH HELPER / GRINDER
27 PIPE  FABRICATOR
28 PIPE FITTER /LAYER
29 STEEL ERECTOR / STRL FITTER
30 STRL STEEL FABRICATOR








எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமெண்டேஷன்




S/NO. JOB TITLE
1 F/M ELECTRICAL
2 F/M INSTRUMENT
3 F/M INSTRUMENTATION
4 JOB PERFORMER (E&I)
6 SUPERVISOR E&I
7 C/H ELECTRICAL
8 C/H ELECTRICAL FITTER / CONDUIT FITTER
9 C/H FABRICATION
10 C/H INSTRUMENTS
11 CABLE JOINTER
12 CABLE SPLICER
13 ELECTRICAL / CONDUITE FITTER
14 ELECTRICIAN  (LTG/EARTH/CABLE)
15 ELECTRICIAN  (TERMINATION)
16 ELECTRICIAN  ASST
17 FABRICATOR
18 INSTRUMENT FITTER ASSISTANT
19 INSTRUMENT TECHNICIAN  (CALIBRATION)
20 INSTRUMENT TECHNICIAN  (INSTALLATION)
21 INSTRUMENT TECHNICIAN  (TERMINATION)
22 INSTRUMENT TECHNICIAN ASST
23 LABOUR/HELPER
24 TRAY FITTER
25 TUBING FITTER
26 WELDER  BRAZING

AMBE INTERNATIONAL
507,Shah and Nahar Industrial Estate
Dr. E’Moses Road,
Next to Toyota Show room,
Worli Naka , Mumbai 4000 18.


குறிப்பு: 


இந்த செய்தி தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. வேறு எந்த மறைவான நோக்கமும் இல்லை. இது தொடர்பான எந்த விஷயத்திற்கும், நாங்கள் பொறுப்பல்ல.


அன்பன்
விஸ்வகரன்
tamizhviswakarma@gmail.com

Learn Astrology

Wednesday, September 7, 2011

கணபதி ஸ்தபதி

ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நம !

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த சிற்பி கணபதி ஸ்தபதி

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டியில் 1927ம் ஆண்டு பிறந்தவர் கணபதி ஸ்தபதி. இவரது குடும்பமே சிற்பிகள் நிறைந்த குடும்பம்தான். இவரது தந்தை ஸ்ரீவைத்தியநாத ஸ்தபதி பிரபல சிற்பி ஆவார். தந்தையைப் போலவே சிற்பத்தில் சிறந்து விளங்கினார் கணபதி.

இவரது திறமையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்துக் கெளரவித்துள்ளது.

இவரது திறமைகளுக்கு சான்றுகள் பல உள்ளன. 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவர் இவர்தான்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கட்டடமும் இவரது கைவண்ணம்தான். 

பல புகழ் பெற்ற இந்துக் கோவில்களை வெளிநாடுகளில் வடிவமைத்தவர் இவர்தான். 

உச்சமாக, கன்னியாகுமரியில் பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி சிற்பிதான்.

இந்த திருவள்ளுவர் சிலை உலகளவில் மிகப் பிரபலமான சிலைகளில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரமாண்ட திருவள்ளுவர் சிலையின் உயரம் 95 அடியாகும், பீடத்தின் உயரம் 38 அடியாகும். மொத்தம் 133 அடியாகும். 2004ம் ஆண்டு தென்னகத்தை சூறையாடிய கடுமையான சுனாமித் தாக்குதலின்போதும் கூட இந்த சிலைக்கு எந்த பாதிப்பும் வராமல் கம்பீரமாக நின்று அனைவரையும் வியக்க வைத்தது
.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது இழப்பு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரின் குடும்பத்துக்கு நமது ஆறுதலை இந்த வலைப்பூவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்பன்

விஸ்வகரன்

ஜோதிடம் கற்க

Wednesday, August 3, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 3

           இப்படி நமக்கென்று ஒரு பாரம்பரியமும், வேத, புராணங்களில் அதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. ஆகம சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களுக்கு நாம்தான் சொந்தக்காரர்கள். இந்தியாவில், மேற்கூறிய சாஸ்திரங்களை முறையாக கடைபிடித்து வடிவமைக்கப்பட்ட கோவில்களே உலகப்புகழ் வாய்ந்ததாக இருக்கிறது.  இப்படி எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வல்லுனர்களாக இருந்த நாம், குறிப்பிட்ட சில சமூகத்தினரின் காழ்ப்புணர்ச்சியால், அவர்களுக்கு மன்னர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அவர்கள் செய்த அரசியலால், நாம் ஒதுக்கப்பட்டோம்.  நம் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வல்லுனர்கள் கொல்லப்பட்டனர். வரலாறும் இதனை மறைத்து விட்டன. வரலாறு தொல்பொருள் ஆய்வு மூலமே கிடைக்கிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் அரசர்களின் ஆணையின் படியே எழுதப்பட்டன. அரசர்கள் விஸ்கர்மாக்களின் படுகொலைகளை எவ்வாறு எழுதுவர்? அதனால் நம் இன வரலாறு, கலைக்காக நாம் செய்த தியாகங்கள்  மறைக்கப்பட்டு விட்டன.  நம் இனத்தால் கோவில்கள், அரண்மனைகள் வடிவமைக்கப்பட்டு,  நிர்மாணிக்கப்பட்டவுடன், வேலை முடிந்தவுடன், அவர்களை பொதுமக்கள் முன் பாராட்டுவது போல் பாராட்டி, பரிசுப் பொருட்களை கொடுத்து மறு நாளே அவர்களை கொன்று விடுவார்கள். அதற்கு பயந்து எத்தனையோ குடும்பங்கள் ஊர் விட்டு, ஊர் போய் நாடோடியாக திரிந்தனர். மொத்தத்தில் நம்முடைய அறிவு, தொழில் திறமையை சுரண்டி, காரியம் சாதித்த பின் விலங்கிற்கும் கேவலமாய் நம்மை நடத்தினர். விலங்குகளுக்கு உள்ள ஒரு சுதந்திரம் கூட நமக்கு கிடைக்கவில்லை. வெட்கக்கேடு !

           இதற்கு காரணம், இதைப்போல ஒரு சிறந்த கலைப்படைப்பு வேறு எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது என்ற அரசர்களுக்கே உரித்தான ஆணவமே ! இந்த கட்டிடக்கலை வல்லுனரை உயிரோடு விட்டால், இதை விட சிறந்த கலைப்படைப்பை வேற நாட்டில் செய்து விடுவார் என்று அவருக்கு அருகில் உள்ள வேறு சமூகத்தினர் போட்டு விட்டதன் விளைவே, விஸ்கர்மா இனத்தின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது. ஏனென்றால் தமது இனத்திற்கு இணையாக சாஸ்திரம் அறிந்தவர்கள் இவர்களே என்ற பொறாமை உணர்வும்  காரணமாக இருந்திருக்கலாம். இவர்களை “தாம் வாழ பிறரைக் கெடுத்தவர்கள்” என்று கூறினால் அது மிகையாகாது.

           ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் ஆனந்தம் அடைவதற்கு பதில் அழுது புலம்பும் நிலை ஏற்பட்டது. அரசர்கள் நம் இன வாரிசுகளையும் விட்டு வைக்கவில்லை. அதனால் விஸ்கர்மாக்களில் பலர் குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி  வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற எல்லா சமூகத்தினரும் கூட்டம் கூட்டமாக கூடி வாழ்ந்த போது, நாம் மட்டும் நாடோடி வாழ்க்கை வாழ நேரிட்டது.

           இப்பொழுதும் நீங்கள் காணலாம், ஒரு கிராமத்தில் நூற்றுக்கு ஒரு குடும்பம் மட்டுமே நம் இனத்தினர் இருப்பதைக் காணலாம். மற்ற ஜாதியினர் 40, 50 குடும்பங்கள் இருக்கும். ஏனென்றால் அவர்கள் ஒரே இடத்தில் ஒரே இனமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நம் இன ஆண்கள் அரசர்களுக்கு பயந்து, குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி, நாடோடியாக வாழ்ந்தமையால் இன்று மக்கள் தொகையில் விஸ்கர்மா இனத்தின் சதவீதம் மிகக்குறைவாகவே உள்ளது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ! 
          என்ற பழமொழியின் பின்புலத்தை ஆரோய்ந்தொமெனில், நம் இனத்தவரின் திறமை விளங்கும். கல்லில் கலைவண்ணத்துடன் நாயின் உருவத்தை செதுக்கியபின், நாயின் உருவத்தைக் காணும்போது, நாயின் தத்ரூபமான உருவம் தான் தெரியுமே தவிர அது ஒரு கல் என்று நினைக்கத் தோன்றாது. அதைப் போல கல்லின் தன்மை, நிறம் போன்றவற்றை காணும் போது அது ஒரு கல்லாகத்தான் தெரியுமே தவிர நாயாகத்தெரியாது. இது தான் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்.

இதைப்போல, இனி எந்த கோவிலை கண்டாலும், அதன் அழகை மட்டுமே காணாமல், அதில் மறைந்திருக்கும் நம் இனத்தவரின், திறமை, உழைப்பு, அவர்கள் செய்த உயிர்த் தியாகம் போன்றவற்றையும் மனதில் காணுங்கள். இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

           நம்முடைய இனம் ஒரு வஞ்சிக்கப்பட்ட இனம்.

           இன உணர்வு கொள் !! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க

Sunday, July 17, 2011

வேலை வாய்ப்பு - பேக்கரி

தமிழ் விஸ்வகர்மா அன்பர்களே !

வெளிநாட்டில் (துபாய் - யு.ஏ.இ. ) பேக்கரி வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் மின் அஞ்சல் செய்து, விண்ணப்பிக்கலாம். பின்வரும் பணிகளில் அனுபவம் உள்ளவர்கள், கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களின் விவரங்களை ஆங்கிலத்தில் அனுப்பவும.

Please find the below vacancy at Golden Loaf Est, Only experienced candidates in the same may forward their CV’s to john@goldenloafuae.com and mark a copy to joblinkss@gmail.com .


Kindly mention the subject - the position you are applying for:


· Bakery Production supervisors
· Bakery Experienced workers

 மெயில் அனுப்ப வேண்டிய முகவரி:  john@goldenloafuae.com


குறிப்பு :

இது ஒரு தகவலேயன்றி மற்றபடி இது தொடர்பான எந்த விஷயத்திற்கும்  நாங்கள் பொறுப்பல்ல.

விஸ்வகரன் 


ஜோதிடம் கற்க


Tuesday, July 12, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 2

           பொதுவாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “சொந்தக்காரங்க ..”. இந்த சொந்தக்காரங்க யார்? இவர்களுக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு நாம் முதலில் விடை காண வேண்டும். இந்த வலைப்பூவைத் தொடங்கி ஏறக் குறைய பல மாதங்கள் ஆகிறது. இந்த பல மாத காலத்தில், ஜாதிப் பெருமையை, பழங்கதைகளை எழுதி எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்காமல், ஆக்கப் பூர்வமாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதியே இதுவரை பழங்கதைகளை எழுதவில்லை. ஆனால் வருங்கால சந்ததியினருக்கு நம்முடைய சோகக் கதை தெரியாமல் போய்விடும் என்று கருதியே, இப்பதிவை எழுத நேர்ந்தது.

முதலில் விஸ்வகர்மா என்றால் யார் என்று பார்ப்போம்?

ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ரிக் வேதம் 10.81, 10.82 போன்ற ஸ்லோகங்களில் விஸ்வகர்மாப் பற்றிய விஷயங்கள் உள்ளன.

(1) முழு உலகத்தையும் வடிவமைத்த தேவ சிற்பி விஸ்வகர்மா.


(2) உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் விஸ்வ ரூபத்தைப் புகழ்கின்றன.


(3) தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாகனங்களையும், ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்த என்ஜீனியர் ஆவார்.


விஸ்வகர்மாவின் பரம்பரை

விஸ்வகர்மாவின் புதல்வராக ஐவரை, வாயு புராணம் நான்காம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது.

1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி சாஸ்திரம் என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார். ஆங்கிலச் சொற்கள் Man, Human, Woman போன்றவைகளுக்கு இவரே காரணகர்த்தா என்பது சிந்தனைக்குரியதே ! ஆங்கிலத்தை இங்கிலீஷ் என்று கூறினாலும், பல உலக மொழிகளில் இன்றும் ஆங்கிரஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி. பராசர முனிவர் ஜோதிட சாஸ்திரம் எழுதியவர்.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :        
                      ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.


5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜெய்மினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி.ஜெய்மினி முனிவர் ஜெய்மினி சூத்திரம் என்ற ஜோதிட சாஸ்திர நூலை எழுதியவர்.


விஸ்வகர்மாவின் கோத்திரங்கள்
 
1) மனுவின் வழித்தோன்றல்கள் 

(இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்


இனி கோத்திரம் என்ன என்று கேட்டால் தைரியமாக சொல்லலாம். பிராமணர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லித் தருகிறார்கள். பிராமணர்களைப் போன்று நமக்கும் எல்லாம் இருக்கிறது என்று கூறவே இந்த தகவல், பின்பற்றுவது தங்கள் விருப்பம்.


அன்பன்
விஸ்வகரன்

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

Wednesday, July 6, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1

சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. 

வரப்புயர நெல் உயரும் ! 
நெல் உயர குடி உயரும் ! 
குடி உயர கோன் உயர்வான் ! 
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?

மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார்.  இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர்.  சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார். 

நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.

விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

Monday, February 21, 2011

நேர் காணலில் வெற்றி பெற பயிற்சி



           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெற  பயிற்சி அளிக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியிலேயே, பள்ளிப் படிப்பு  மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இருப்பார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களும், ஆங்கிலத்தில் பேச இயலாத நிலையில் இருப்பார்கள். இதனால், நம் தமிழ் விஸ்வகர்மா இன இளைஞர்கள்,  உலகத் தரத்தில் ஆங்கிலம் பேச இயலாமலும் உள்ளார்கள். மேலும் அவர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கடின முயற்சியே. நாங்கள் அவர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படியென்றும், நேர் காணலில் வெற்றி பெறுவது எப்படியென்றும் பயிற்சியளிக்கிறோம்.

           நேர்காணலுக்கு தயாராகும் இளைஞர்கள், வேலைத் தேடும் இளைஞர்கள் அவர்களின் படிப்பு பற்றிய விவரங்களையும், எந்த தொழிற்பிரிவில் வேலை செய்யும் ஆர்வம், ஆற்றல் உள்ளது என்பதையும் எங்களுக்கு தெரிவித்தால், நாங்கள் அதற்கேற்ப உங்களுக்கு பயிற்சியை அளிக்கிறோம். எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், உங்கள் துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறோம்.  அவசியம் ஏற்பட்டால், நேரடி பயிற்சியையும் அளிக்கிறோம்.

           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த பதிவை படிப்பவர்கள் அருகில் உள்ள நம் இன இளைஞர்களுக்கு இந்த செய்தியை அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்
விஸ்வகரன்
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க 

Wednesday, February 9, 2011

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்


எமது இந்த தமிழ் விஸ்வகர்மா என்ற வலைப் பூவின் நோக்கமே, நமது இனத்திற்கு நற்பணிகள் செய்வதுதான். பிரிந்து கிடக்கும் தமிழ் விஸ்வகர்மா இனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எமது தலையாய நோக்கமாகும். 
           நற்பணிகளை முதலில் நம் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக நம் இன மக்களிடமும் காணப்படும் ஒரு குறைபாடு என்னவெனில், வேற ஜாதிக்காரங்க கூட நமக்கு உதவுவார்கள், ஆனால் நம் ஆட்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற ஆதங்கம் மனக் குறை எல்லோரிடமும் உள்ளது. அதனால் நாம் முதலில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல விதமாக பழக கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் சுமூகமான உறவை, அதாவது நல்ல உறவை பேணிக் காக்க வேண்டும்.
           குற்றம் பார்க்கில்; சுற்றம் தேரான்  - என்ற அவ்வையின் வாக்கிற்கு இணங்க, நம்முடைய உறவினர்களை எதெற்கெடுத்தாலும் குற்றம் கூறுவதை தவிர்க்கவும். அவர்களை அன்பால் திருத்த முயற்சிக்கவும். அன்பே சிவம். குறைகளை நாகரீகமாக, அவர்கள் மனம் நோகாமல், எடுத்துச் சொல்ல பழக வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை விட குறைவாக இருந்தாலும், அவர்கள் உதவி என்று கேட்டு வரும்பொழுது, பணத் தேவைக்கான காரணம், மிகவும் நியாயமாக இருந்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்வது மிகவும் புண்ணியம். அந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக, நீங்கள் தான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 
           அடிப்படைத் தேவை என்றால், பிரசவ செலவு, மருத்துவ செலவு, மழைக் காலங்களில், சரிவர வேலை கிடைக்கவில்லை என்றால் குடும்பச் செலவு, கல்வி உதவி போன்றவைகளே. இவ்வாறு தேவைகளை பகுத்தறிந்து, உதவி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் உதவவில்லை என்றால் அவர்கள் வேறு ஜாதியினரிடம்தான் போவார்கள்.

அதனால் நாம் செய்ய விரும்பும் நற்பணிகளை முதலில் வீட்டிலிருந்தே தொடங்குவோமாக !  

நம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோமாக !

Charity begins at HOME !


ஒற்றுமையே உயர்வுக்கு வழி !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 


Sunday, February 6, 2011

திருமணப் பொருத்தம்

           தமிழ் விஸ்வகர்மாவைச் சேர்ந்த மண மக்களுக்கு சேவை கட்டணமின்றி திருமணப் பொருத்தம், கணித்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள், மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை வைத்து பார்ப்பதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள், இதுவே போதுமானது என்று கூறிவிடுகிறார்கள். ஆனால், 10 பொருத்தங்களுடன், அவர்களின் ஜாதகங்களும் பொருந்துகிறதா என்று பார்ப்பதே சிறந்த முறையாகும். ஜாதகங்களை வைத்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப பொருந்துகிறதா என்று பார்க்க முடியும். அதனால் ஆயிரங்காலத்து பயிரான திருமண வாழ்க்கைக்கு முறையாக பொருத்தம் பார்ப்பதால், திருமண வாழ்க்கையில் வரும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, வாழ்க்கையை இன்பகரமானதாகவும், வளமானதாகவும் அமைக்க இயலும். 

இருவரின் ஜாதகம் கணிக்க :
           மணமக்களின் ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
மணமகளின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மணமகனின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், திருமணப் பொருத்தம் சேவை கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல் : tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க



சேவை கட்டணமின்றி ஜாதகம்

           தமிழ் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்த நம் இன மக்களுக்கு, சேவை கட்டணமின்றி ஜாதகம் கணித்து, பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஜாதகம் கணிக்க :
           ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
ஜாதகரின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் செய்தால் போதும், ஜாதகம் கணித்து அனுப்பப்படும். நாங்கள் தமிழில் கணித்து அனுப்பும் ஜாதகம்,   பின் வரும் விவரங்களுடன் இருப்பதால், அனைவருக்கும் எளிதில் புரியும்.
1. இராசி சக்கரம்
2. நவாம்ச சக்கரம்
3. கிரக ஸ்புட அட்டவணை
4. தசா புத்தி விவரம்
5. ஏழரைச் சனியின் விவரம்

ஜாதக பலன் அறிய :
           ஜாதகத்திற்குரிய பலன்களை தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு, சேவை கட்டணமின்றி அனுப்பி வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் அறிய வேண்டிய பலனை அல்லது உங்கள் பிரச்சனை என்ன என்பதை ஒரு கேள்வியாக எங்களுக்கு மின் அஞ்சல் செய்து கேட்டால், உங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ச்சி செய்து, அதற்குரிய பதில் தரப்படும். (நேரமின்மை காரணமாக, ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் தரப்படும்)

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல்: tamizhviswakarma@gmail.com



ஜாதகம் கற்க




Saturday, February 5, 2011

வேலை

தமிழ் விஸ்கர்மா இன மக்களுக்கு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர, உருவாக்கித் தர பாடுபடுவோம். வேலை பற்றிய அறிவிப்பு எங்கு வந்தாலும், அதனை நம் சமூக மக்களின் நலன் கருதி இவ்வலைபூவின் வாயிலாக வெளியிடுவோம். அதனால் நம் இன மக்கள் தொடர்ந்து இங்கு வருகை தந்து, வேலை வாய்ப்பு அறிவிப்புகளை படித்து அதனை நம்மவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். உதாரணத்திற்கு இன்று (06 பிப்ரவரி 2001) தினமலர் நாளிதழில் வந்த ஒரு வேலை வாய்ப்பு செய்தியைத் தருகிறோம்.

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:ஓமன் நாட்டிலுள்ள முன்னனி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 முதல் 28 வயதிற்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்ற னர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதி யும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப்பின்னனியில் எடுக்கப்பட்ட5 ஃபோட்டோக்கள் ஆகியவற்றுடன் எண் 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு ,சென்னை -600020 என்ற முகவரி அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இன்று7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு வரவேண்டும்.மேலும் விபரங்கள் அறிய இந்நிறுவன தொலைபேசி எண்கள்-044.24464268, 24464269 மற்றும் மொபைல் 9940393617, 9952940460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 06 பிப்ரவரி 2011

தமிழ் விஸ்வகர்மா சமூகப் பணி தொடரும்!
ஒற்றுமையே உயர்வு தரும் !

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Tuesday, February 1, 2011

மருத்துவ உதவிகள்

நோயற்ற வாழ்வே ! குறைவற்ற செல்வம் !

           விஸ்வகர்மா குடும்பத்தில் உள்ள அனைவரையும், தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு (Free Medical Insurance) திட்டததைப் பற்றி எடுத்துச் சொல்லி, காப்பீடு செய்யுமாறு வலியுறுத்துங்கள். அருகில் உள்ள அரசு சுகாதார மையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று, அது குறித்து விவரங்களை சேகரித்து, தேவையான மனுக்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுத்தால், நம் இன மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். நோய்க்கு இலவச வைத்தியங்களை, நல்ல மருத்துவமனைகளில், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதைப் படிக்கும் தமிழ் விஸ்வகர்மா அன்பர்கள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை, நமது சமூக மக்களுக்கு, எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தித் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           சில வியாதிகள் அந்த திட்டத்தில், பட்டியலிடப்படாமல் உள்ளது. அதனை நன்கு அறிந்து, நம் இன மக்களுக்கு எடுத்துச் சொல்லவும். அவ்வாறு, பட்டியலிடப்படாத நோய்க்கு சிகிச்சையளிக்க மறுக்கும்பட்சத்தில், நாம் உதவியாக இருப்போம். இது உறுதி !  குறிப்பாக குழந்தைகள் நலனில், மிகவும் அக்கறை எடுப்போம். வருங்காலம் பிள்ளைகள் கையில், நோயற்ற ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவது நமது கடமையாகும்!

ஒற்றுமையே உயர்வுக்கு வழி ! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Sunday, January 30, 2011

ஜாதி அடையாளம் தேவையா?

தமிழ் விஸ்வகர்மா அன்பர்களே !

           ஜாதி அடையாளம் நமக்குத் தேவையா? என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியிருக்கிறாரே ! என்றும் பாரதியை, நினைவுபடுத்தினார். பிராமண குலத்தில் பிறந்த, பாரதியார் அவ்வாறு பாடியமைக்காக அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. குடிக்க கஞ்சி இல்லாமல், உடுத்த துணியில்லாமல், உள்ளூரில் வசிக்க இயலாமல், உற்றார் உறவினர் அவரை வெறுத்து ஒதுக்கியதால் அவர் அடைந்த கஷ்டங்கள், எண்ணிலடங்காது ! பாரதி பாடி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இன்னும் மத்திய, மாநில அரசுகளில், பிராம்மணர்கள் முக்கிய பதவியில் உள்ளனர். அம்பேத்காரின், போராட்டமும், சட்ட உருவாக்கமும், அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் எப்படி முக்கிய பொறுப்புகளில் இன்னும் உள்ளனர், அது தான் அவர்களின் ஒற்றுமை. இன்றும் பத்திரிக்கை துறைகளில், அவர்கள் எழுதுவது தான் செய்தி, ஆனையை பூனை ஆக்குவார்கள், பூனையை ஆனையாகவும் ஆக்குவார்கள்.

           நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்து, இந்த தலைப்பை ஆராயலாம். அதிக சம்பளமும், கவுரமும், மரியாதையும், அரசாங்கத்தில், மிகவும் உயர் பதவி என்றும், அமெரிக்க விண்வெளி மைய நாஸா விஞ்ஞானியை எல்லோரும் போற்றுவார்கள். அதைப் போன்ற ஒரு அமைப்பே, அதற்கு எந்த வகையிலும் குறையாத சொந்த விஞ்ஞானிகளைக்  கொண்ட அமைப்பே நமது இந்தியாவின், பெருமை மிகு, விண்வெளி ஆராய்ச்சி மையம் “இஸ்ரோ” ஆகும்.

           இஸ்ரோவில் சேர வேண்டும் எனில், கல்வித் தகுதியுடன், அறிவு ஜீவியாகவும், ஆராய்ச்சியில் ஈடுபாடும் உடையவர் தான், பல சோதனைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, முதலில் துணை விஞ்ஞானியாக  சேர முடியும். பிறகு படிப்படியாக உங்கள் திறமை, அனுபவம், கொடுக்கப்பட்ட வேலையில் வெற்றி பெற்று, சாதித்தால் தான், துணை விஞ்ஞானியாக இருந்து பிறகு விஞ்ஞானியாக முடியும். அவரே ஒரு சேர்மன் பதவிக்கு வர வேண்டும் என்றால், குறைந்தது 20 வருடங்களாகும். அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருந்த மாதவன் நாயர், தன் ஜாதி அடையாளங்களை விட்டாரா? அவர் பெயரை வைத்தே அவர், ஜாதியையும், அவர் சார்ந்த மாநிலததையும், எல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறது.

           100 வருடங்களுக்கு முன்பு வரை, நாயர் ஜாதியினர் எப்படி, சீரழிந்து, தென்னிந்தியாவின் கலாசாரத்தை எப்படி சீரழித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு அறிந்த எல்லோருக்கும் தெரியும். மேலும், நாயர்களின் வரலாற்றை, தெரிந்து கொள்ள விரும்புபவர்கள். இந்த பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க்-ஐ கிளிக்கினால் போதும். இப்பொதே, கிளிக் செய்ய போய்விடாதீர்கள். சற்று பொறுமையாக, இந்த பதிவை முழுவதும், படித்துவிட்டு பின்பு செல்லலாம்.
         
           எனக்கு தனிப்பட்ட முறையில், யாரோடும் பிணக்கோ அல்லது எந்த ஜாதியோடும் துவேஷமோ அல்ல. நம்முடைய, தமிழ் விஸ்வகர்மாவைச் சார்ந்த ஒரு இளைஞருக்காகவே இந்த பதிவை எழுதுகிறேன். அவர் இதனைப் படித்து, தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டும், விஸ்வகர்மா என்று சொன்னால் கேவலம் என்ற தன்னுடைய, தாழ்வு மனப்பாண்மையை போக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகவே இதனை படிக்கும் அன்பர்கள் கருத வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           அப்படி கேடு கெட்ட ஒரு ஜாதியில் பிறந்து, மிகப் பெரிய பதவியை அடைந்தாலும், அவர்கள் தன் ஜாதியை விட்டுக் கொடுக்காமல் இன்றும் தன் பெயர் நிலைக்குமாறு, தன் பெயரில் ஜாதி நிலைக்குமாறு ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார்கள்.

           இன்னும் பல உதாரணங்கள் உண்டு அன்பர்களே! இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், நடிகை நவ்யா நாயர், நம்பியார் என்று இந்த பட்டியல் நீளும் ...

           அதனால், அன்பர்களே ! பெருமை மிகு ஜாதியாம் விஸ்வகர்மாவில் பிறந்ததற்காக பெருமைப்படுங்கள். நாம் கோவில், கட்டினால் தான், சிலை செய்தால் தான், அய்யர் அர்ச்சனை செய்ய முடியும். இந்த உலகத்தைப் படைத்தவரே, நம் விஸ்வகர்மாதான் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. விஷ்னுவின் கையில் உள்ள சக்கராயுதத்தை, வடிவமைத்து செயல்படுத்தி காட்டிய பெருமை, நமக்கே உரியது என்று, விஷ்னு புராணம் சொல்லுகிறது.

           உலக அளவில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைப் பார்க்க வந்த, சுற்றுலா பயணிகளினால்  நமது நாட்டிற்கு கிடைத்த அன்னிய வரவு ரூ 50, 000 கோடி. அவர்கள், நம் முன்னோர்களின் (விஸ்கர்மா) திறமையையும், தொழில் நுட்பத்தையும் கண்டு, எண்ணி எண்ணி வியப்படைகிறார்கள். அவ்வளவு பெருமை மிகு இனமாம், நம் விஸ்கர்மா இனம்.

          திருமணம், நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் மட்டுமே, நம்முடைய ஜாதி அடையாளத்தைத் தேடுகிறோம். மற்ற நேரங்களில், வசதியாக நாம் மறந்து விடுகிறோம். எங்களுடைய மதத்தில் சேர்ந்தால், ஜாதி பாகுபாடு பார்க்க மாட்டோம், அனைவரும் சமம் என்று சொல்லி, பாவப்பட்ட தலித்துகளை மதம் மாற்றுகிறார்கள். ஆனால் மதம் மாறியவுடன், மதத் தலைவர்கள், வேலை முடிந்தது என்று கழன்றுவிடுகிறார்கள். கடந்த வாரம், திருநெல்வேலியில், 3000 தலித் கிறிஸ்துவர்கள் ஜாதி அடிப்படையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்று  போராடி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள். சாதி வேண்டாம் என்று சொல்லி மதம் மாறியவர்கள் கூட ஜாதியை விடவில்லை. இன்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாடார் இனம் உள்ளது. இந்து நாடார், கிறிஸ்துவ நாடார். ஜாதியை விட்ட பாடில்லை. நாம் மட்டும் ஏன் விட வேண்டும்.

           இப்பொழுது கூறுகிறேன் என்ன விஷயம் என்று, தமிழ் விஸ்வகர்மா இளைஞருக்கு, நம் சார்பாக, தமிழ் விஸ்வகர்மா என்ற மின்னஞ்சல் பெயரில், ஃபேஸ்புக்கில் ஒரு திருமண நிச்சயதார்த்த வாழ்த்து கடந்த வாரம் அனுப்பியிருந்தேன். ஓரே நாளில் அதனை நீக்கிவிட்டார், மற்ற எல்லோரின் வாழ்த்தும் (எனக்கு முன்பு அனுப்பியது, எனக்கு பின்பு அனுப்பியது)  இருக்கிறது. ஆனால் விஸ்வகர்மா என்ற அடையாளம் ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை போலும், நீக்கி விட்டார், என்பதை மிகவும் வேதனையுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க