Monday, February 21, 2011

நேர் காணலில் வெற்றி பெற பயிற்சி



           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெற  பயிற்சி அளிக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியிலேயே, பள்ளிப் படிப்பு  மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இருப்பார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களும், ஆங்கிலத்தில் பேச இயலாத நிலையில் இருப்பார்கள். இதனால், நம் தமிழ் விஸ்வகர்மா இன இளைஞர்கள்,  உலகத் தரத்தில் ஆங்கிலம் பேச இயலாமலும் உள்ளார்கள். மேலும் அவர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கடின முயற்சியே. நாங்கள் அவர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படியென்றும், நேர் காணலில் வெற்றி பெறுவது எப்படியென்றும் பயிற்சியளிக்கிறோம்.

           நேர்காணலுக்கு தயாராகும் இளைஞர்கள், வேலைத் தேடும் இளைஞர்கள் அவர்களின் படிப்பு பற்றிய விவரங்களையும், எந்த தொழிற்பிரிவில் வேலை செய்யும் ஆர்வம், ஆற்றல் உள்ளது என்பதையும் எங்களுக்கு தெரிவித்தால், நாங்கள் அதற்கேற்ப உங்களுக்கு பயிற்சியை அளிக்கிறோம். எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், உங்கள் துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறோம்.  அவசியம் ஏற்பட்டால், நேரடி பயிற்சியையும் அளிக்கிறோம்.

           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த பதிவை படிப்பவர்கள் அருகில் உள்ள நம் இன இளைஞர்களுக்கு இந்த செய்தியை அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்
விஸ்வகரன்
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க 

Wednesday, February 9, 2011

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்


எமது இந்த தமிழ் விஸ்வகர்மா என்ற வலைப் பூவின் நோக்கமே, நமது இனத்திற்கு நற்பணிகள் செய்வதுதான். பிரிந்து கிடக்கும் தமிழ் விஸ்வகர்மா இனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எமது தலையாய நோக்கமாகும். 
           நற்பணிகளை முதலில் நம் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக நம் இன மக்களிடமும் காணப்படும் ஒரு குறைபாடு என்னவெனில், வேற ஜாதிக்காரங்க கூட நமக்கு உதவுவார்கள், ஆனால் நம் ஆட்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற ஆதங்கம் மனக் குறை எல்லோரிடமும் உள்ளது. அதனால் நாம் முதலில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல விதமாக பழக கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் சுமூகமான உறவை, அதாவது நல்ல உறவை பேணிக் காக்க வேண்டும்.
           குற்றம் பார்க்கில்; சுற்றம் தேரான்  - என்ற அவ்வையின் வாக்கிற்கு இணங்க, நம்முடைய உறவினர்களை எதெற்கெடுத்தாலும் குற்றம் கூறுவதை தவிர்க்கவும். அவர்களை அன்பால் திருத்த முயற்சிக்கவும். அன்பே சிவம். குறைகளை நாகரீகமாக, அவர்கள் மனம் நோகாமல், எடுத்துச் சொல்ல பழக வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை விட குறைவாக இருந்தாலும், அவர்கள் உதவி என்று கேட்டு வரும்பொழுது, பணத் தேவைக்கான காரணம், மிகவும் நியாயமாக இருந்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்வது மிகவும் புண்ணியம். அந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக, நீங்கள் தான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 
           அடிப்படைத் தேவை என்றால், பிரசவ செலவு, மருத்துவ செலவு, மழைக் காலங்களில், சரிவர வேலை கிடைக்கவில்லை என்றால் குடும்பச் செலவு, கல்வி உதவி போன்றவைகளே. இவ்வாறு தேவைகளை பகுத்தறிந்து, உதவி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் உதவவில்லை என்றால் அவர்கள் வேறு ஜாதியினரிடம்தான் போவார்கள்.

அதனால் நாம் செய்ய விரும்பும் நற்பணிகளை முதலில் வீட்டிலிருந்தே தொடங்குவோமாக !  

நம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோமாக !

Charity begins at HOME !


ஒற்றுமையே உயர்வுக்கு வழி !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 


Sunday, February 6, 2011

திருமணப் பொருத்தம்

           தமிழ் விஸ்வகர்மாவைச் சேர்ந்த மண மக்களுக்கு சேவை கட்டணமின்றி திருமணப் பொருத்தம், கணித்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள், மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை வைத்து பார்ப்பதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள், இதுவே போதுமானது என்று கூறிவிடுகிறார்கள். ஆனால், 10 பொருத்தங்களுடன், அவர்களின் ஜாதகங்களும் பொருந்துகிறதா என்று பார்ப்பதே சிறந்த முறையாகும். ஜாதகங்களை வைத்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப பொருந்துகிறதா என்று பார்க்க முடியும். அதனால் ஆயிரங்காலத்து பயிரான திருமண வாழ்க்கைக்கு முறையாக பொருத்தம் பார்ப்பதால், திருமண வாழ்க்கையில் வரும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, வாழ்க்கையை இன்பகரமானதாகவும், வளமானதாகவும் அமைக்க இயலும். 

இருவரின் ஜாதகம் கணிக்க :
           மணமக்களின் ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
மணமகளின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மணமகனின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், திருமணப் பொருத்தம் சேவை கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல் : tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க



சேவை கட்டணமின்றி ஜாதகம்

           தமிழ் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்த நம் இன மக்களுக்கு, சேவை கட்டணமின்றி ஜாதகம் கணித்து, பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஜாதகம் கணிக்க :
           ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
ஜாதகரின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் செய்தால் போதும், ஜாதகம் கணித்து அனுப்பப்படும். நாங்கள் தமிழில் கணித்து அனுப்பும் ஜாதகம்,   பின் வரும் விவரங்களுடன் இருப்பதால், அனைவருக்கும் எளிதில் புரியும்.
1. இராசி சக்கரம்
2. நவாம்ச சக்கரம்
3. கிரக ஸ்புட அட்டவணை
4. தசா புத்தி விவரம்
5. ஏழரைச் சனியின் விவரம்

ஜாதக பலன் அறிய :
           ஜாதகத்திற்குரிய பலன்களை தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு, சேவை கட்டணமின்றி அனுப்பி வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் அறிய வேண்டிய பலனை அல்லது உங்கள் பிரச்சனை என்ன என்பதை ஒரு கேள்வியாக எங்களுக்கு மின் அஞ்சல் செய்து கேட்டால், உங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ச்சி செய்து, அதற்குரிய பதில் தரப்படும். (நேரமின்மை காரணமாக, ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் தரப்படும்)

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல்: tamizhviswakarma@gmail.com



ஜாதகம் கற்க




Saturday, February 5, 2011

வேலை

தமிழ் விஸ்கர்மா இன மக்களுக்கு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர, உருவாக்கித் தர பாடுபடுவோம். வேலை பற்றிய அறிவிப்பு எங்கு வந்தாலும், அதனை நம் சமூக மக்களின் நலன் கருதி இவ்வலைபூவின் வாயிலாக வெளியிடுவோம். அதனால் நம் இன மக்கள் தொடர்ந்து இங்கு வருகை தந்து, வேலை வாய்ப்பு அறிவிப்புகளை படித்து அதனை நம்மவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். உதாரணத்திற்கு இன்று (06 பிப்ரவரி 2001) தினமலர் நாளிதழில் வந்த ஒரு வேலை வாய்ப்பு செய்தியைத் தருகிறோம்.

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:ஓமன் நாட்டிலுள்ள முன்னனி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 முதல் 28 வயதிற்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்ற னர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதி யும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப்பின்னனியில் எடுக்கப்பட்ட5 ஃபோட்டோக்கள் ஆகியவற்றுடன் எண் 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு ,சென்னை -600020 என்ற முகவரி அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இன்று7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு வரவேண்டும்.மேலும் விபரங்கள் அறிய இந்நிறுவன தொலைபேசி எண்கள்-044.24464268, 24464269 மற்றும் மொபைல் 9940393617, 9952940460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 06 பிப்ரவரி 2011

தமிழ் விஸ்வகர்மா சமூகப் பணி தொடரும்!
ஒற்றுமையே உயர்வு தரும் !

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Tuesday, February 1, 2011

மருத்துவ உதவிகள்

நோயற்ற வாழ்வே ! குறைவற்ற செல்வம் !

           விஸ்வகர்மா குடும்பத்தில் உள்ள அனைவரையும், தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு (Free Medical Insurance) திட்டததைப் பற்றி எடுத்துச் சொல்லி, காப்பீடு செய்யுமாறு வலியுறுத்துங்கள். அருகில் உள்ள அரசு சுகாதார மையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று, அது குறித்து விவரங்களை சேகரித்து, தேவையான மனுக்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுத்தால், நம் இன மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். நோய்க்கு இலவச வைத்தியங்களை, நல்ல மருத்துவமனைகளில், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதைப் படிக்கும் தமிழ் விஸ்வகர்மா அன்பர்கள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை, நமது சமூக மக்களுக்கு, எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தித் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           சில வியாதிகள் அந்த திட்டத்தில், பட்டியலிடப்படாமல் உள்ளது. அதனை நன்கு அறிந்து, நம் இன மக்களுக்கு எடுத்துச் சொல்லவும். அவ்வாறு, பட்டியலிடப்படாத நோய்க்கு சிகிச்சையளிக்க மறுக்கும்பட்சத்தில், நாம் உதவியாக இருப்போம். இது உறுதி !  குறிப்பாக குழந்தைகள் நலனில், மிகவும் அக்கறை எடுப்போம். வருங்காலம் பிள்ளைகள் கையில், நோயற்ற ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவது நமது கடமையாகும்!

ஒற்றுமையே உயர்வுக்கு வழி ! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க